திருச்சி, உறையூர் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (வயது28). வெக்காளியம்மன் கோயில் அருகே செல்போன் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 2023ம் ஆண்டு தனது காரை அவருடைய நண்பரான நெசவாளர் காலனியைச் சேர்ந்த வசந்தகுமார் (வயது34) என்பவரிடம் கொடுத்து இருந்தார். ஆனால், அவர் அந்த காரை நண்பரிடம் திருப்பி தரவில்லை. காரை பலமுறை கேட்டும் திருப்பிக் கொடுக்காததால் இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் ராம் பிரசாத் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து வசந்தகுமாரை கைது செய்தனர். காரும் மீட்கப்பட்டது.
Comments are closed.