Rock Fort Times
Online News

பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது! திருச்சி, துவாக்குடி போலீசார் நடவடிக்கை !

சென்னை ரெட்ஹில்ஸ் புதுநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய் (25). இவர் திருவெறும்பூர் அருகேயுள்ள துவாக்குடியில் கடந்த 2021ம் ஆண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு சிறுமியைக் கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விஜயைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் விஜய் ஜாமினில் வெளிவந்தார். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் விஜய் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதன்படி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக குற்றவாளி தலைமறைவாக இருப்பதை அறிந்த திருச்சி மாவட்ட எஸ்பி செல்வ நாகரத்தினம் அவரை கைது செய்ய உத்தரவிட்டார்.அதன்படி துவாக்குடி எஸ்ஐ நாகராஜன் தலைமையிலான போலீசார் சென்னை நெற்குன்றத்தில் தலைமறைவாக இருந்த விஜயை நேற்று கைது செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்