Rock Fort Times
Online News

டிராக்டர் மீது கார் பயங்கர மோதல்: மருத்துவ கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி…

திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் நோக்கி 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். இன்று(22-2-2024) அதிகாலை 3 மணி அளவில் சின்ன காங்கேயனூர் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற டிராக்டரின் மீது பயங்கர வேகத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 4 மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்