Rock Fort Times
Online News

துவரங்குறிச்சி அருகே பாலத்தில் கார் பயங்கர மோதல்: பேராசிரியர் உட்பட 2 பேர் பலி…!

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை, எல்ஜி நகரைச் சேர்ந்தவர் பெட்ரிக் (55). தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மகன் மெல்வின் (33). சென்னை மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய பிரிசில்லா (26). மூவரும் மதுரையில் உள்ள தங்கள் ஊருக்கு செல்ல சென்னையிலிருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டனர். காரை மெல்வின் ஓட்டி வந்தார். அந்த கார் இன்று(29-11-2025) காலை துவரங்குறிச்சி – நத்தம் தேசிய நெடுஞ்சாலை கோசிக்குறிச்சி, கிருஷ்ணாபுரம் அருகில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுற பாலத்தின் மீது மோதியதில் காரின் முன் பகுதி கடும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெட்ரிக் உயிரிழந்தார். மெல்வின் மற்றும் அவரது மனைவி ஆரோக்கிய பிரிசில்லா ஆகிய இருவரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஆரோக்கிய பிரிசில்லா செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்