திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்தாா் :
எதிர்க்கட்சியாக இருந்த போது ராஜ்பவன் வாசலை நீங்கள் (திமுக) மிதிக்காமல் இருந்திருக்கலாமே – எதிர்க்கட்சியாக இருந்தபோது உங்களுக்கு ஆளுநர் தேவைப்பட்டார் இன்று ஆளும் கட்சியாக இருக்கும் போது ஆளுநர் தேவைப்படவில்லையா? ஆளுநர்களை முதலில் ஆளுநராக நடத்துங்கள் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு, ஆளுநருக்கும் அவர் கருத்துகளை கூற கண்டிப்பாக உரிமை உண்டு. ஆளுநரின் கருத்துகளுக்கு நீங்கள் எதிர் கருத்து கூறலாம் ஆனால் ஆளுநர் கருத்தே கூறக்கூடாது என நீங்கள் எப்படி சொல்ல முடியும்?
திமுக அரசு இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து பேசி வரும் நிலையில்,இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தரராஜன் :
அறிவிப்பு கொடுத்து செயல்படுத்தக்கூடிய அரசை பார்த்திருக்கிறோம் – ஆனால் அறிவிப்பு கொடுத்து அதனை திரும்ப பெரும் அரசாக தான் திமுக அரசு உள்ளது என்பது எனது கருத்து. தீவிரவாதத்தை எந்த வகையிலும் அனுமதிக்க கூடாது என்பதே பாரத பிரதமரின் கருத்து – கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நானும் பார்க்கலாம் என்று உள்ளேன் என கூறினாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.