திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் சிபிராஜ் (வயது 22). டிப்ளமோ முடித்துள்ள இவர், சம்பவத்தன்று இரவு பால் மற்றும் பிஸ்கட் சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவரது தாய் சிபிராஜை தட்டி எழுப்பினார். ஆனால், அவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் அருகில் உள்ள திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், போலீசார் சிபிராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், சிபிராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. மது அருந்திவிட்டு பால் பிஸ்கட் சாப்பிட்டதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.