Rock Fort Times
Online News

விராலிமலை அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் கொள்ளை…

மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு...

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டி- தென்னலூர் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் மது குடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த டாஸ்மாக் கடையில் தினமும் பல லட்சம் ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறும். நேற்று ( 18.09.2023 ) விடுமுறை தினம் என்பதால் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றது. இந்த கடையில் மேற்பார்வையாளராக துரைராஜ் என்பவரும், விற்பனையாளர்களாக செந்தில்குமார், பாண்டியன், சோலை ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு 10.30 மணியளவில் வியாபாரமான ரூ.4,83,390 பணத்தை லாக்கரில் வைத்து பூட்டிவிட்டு ஊழியர்கள் வீட்டுக்கு சென்றனர்.
இன்று காலை அப்பகுதி வழியாக சென்ற சிலர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிதனர். இதையடுத்து இலுப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையின் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வசுந்தரதேவி சம்பவ இடத்தை பார்வையிட்டு ஊழியர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்