திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணியாப்பூர், வையம்பட்டி, புத்தானத்தம், பண்ணபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள சில கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை.செழியன் கலந்து கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றதோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,கடந்த முறை உயர்கல்வித்துறைக்கு 8,250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே உயர்கல்வியைப் பொறுத்தவரை தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் கலைஞர்,முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் முனைவர் படிப்பு மற்றும் ஆராய்ச்சி படிப்பவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் படிக்கின்றனர். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, புதிய பாடப்பிரிவுகள், புதிய கல்லூரிகள் என முதல்வரிடம் நிதி பெற்று உயர்கல்வியை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வோம்.இதேபோல் நீட் தேர்வை பொறுத்தவரை தமிழகத்திற்கு கூடாது என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், மத்திய அரசு அதை நிறைவேற்றியே ஆவோம் என்று விடாப்பிடியாக இருந்து கொண்டிருக்கின்றது. மருத்துவத்தில் தமிழகம் தான் முதலிடம் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், வடநாட்டுகாரர்களை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட வடவாதிக்க செயல்தான் இந்த நீட் தேர்வு. அது ரத்தசெய்யப்பட வேண்டும்.சட்டமன்ற போராட்டத்தை, மக்கள் மன்ற போராட்டத்தை நடத்தி இருக்கின்றோம்.நீதிமன்ற போராட்டத்தை நடத்தி எந்தெந்த மாநிலங்களில் விரும்புகிறதோ அவைகளுக்கு மட்டும் நீட் தேர்வு என்று சொல்லுகிற நிலையை தமிழ்நாடு அரசு உருவாக்கும். அதற்கு அனைத்து மாநில முதலமைச்சர்களின் ஆதரவும் கிடைக்கும். நிச்சயம் நடக்கும் என்று கூறினார்.
Comments are closed.