பள்ளிக் கல்வித்துறை சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி இணைச் செயல்பாடுகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற 100 மாணவர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிவுடன் கடந்த 3ம் தேதி ஜப்பான் நாட்டிற்கு பயணம் சென்றுள்ளனா். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நவீன அறிவியல் தொழில் நுட்பங்களோடு உலக புகழ்பெற்று விளங்கும் மிராய்கான் அருங்காட்சியகம் மற்றும் இந்திய தேசிய பள்ளிக்கு சென்றார். பள்ளியில் மாணவர்களோடு தமிழக மாணவர்கள் கலந்துரையாடி அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டனர்.
மிராய்கான் அறிவியல் அருங்காட்சியகம் தொடர்ந்து பல அறிவியல் சாதனைகளைப் படைத்து வருகின்றது. இந்த அருங்காட்சியகத்தை உலகில் உள்ள பல இலட்சம் மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பயணத்தை முடித்த பிறகு மாணவர்கள் தென்கொரியாவிற்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.