Rock Fort Times
Online News

திருச்சியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி- 18 குழந்தைகள் உட்பட 26 பேருக்கு ப்ளு சிகிச்சை: டீன் தகவல்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா அறிகுறிகளோடு மூன்று பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 18 குழந்தைகள் உட்பட 26 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு வைரஸ் காய்ச்சலுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஐந்து குழந்தைகள் பிராண வாயு உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர் என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் கூறினார். மேலும் அவர் பேசுகையில், திருச்சி பகுதியில் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லேப் டெக்னீசியன் லதா(38), கோவா சென்று திரும்பிய மதிவாணன்(42), வெளிநாட்டில் இருந்து திருச்சி வந்த ஹட்சன் ஆகிய 3பேருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களும் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏ செந்தமேட்டிக் அறிகுறி இருப்பதாக தெரிகிறது பி.சி.ஆர் டெஸ்ட் உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கென சிறப்பு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ப்ளு வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு அங்கு 18 குழந்தைகள் உள்ளிட்ட 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐந்து குழந்தைகளுக்கு பிராண வாயு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகப்பேருக்கு வரும் பெண்களுக்கு புழு காய்ச்சல் பரவாத வண்ணம் சிறப்பு டாக்டர்களும் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். திருச்சி பகுதியை பொருத்தவரை குழந்தைகளுக்கு தான் அதிகமாக ப்ளு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள் கண்டிப்பாக அரசு மருத்துவமனையை நாட வேண்டும். இது போன்ற வைரஸ் காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் தான் பரவும். இருமல் தும்மல் போன்றவை ப்ளு வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெறுவது அவசியம். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதற்கு முகக் கவசம் அணிய வேண்டும். இவ்வாறு டீன் நேரு கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்