சிவகங்கை மாவட்டம் பாலையூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 44). இவா் ஆயுள் தண்டனை கைதி. கொள்ளை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து திருச்சி மத்திய ஜெயிலில் சதீஷ் அடைக்கப்பட்டு இருந்தார் . இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. ஜெயில் அதிகாரிகள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் இன்று ( 13.05.2023 ) காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.