ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக இருந்த மாரியப்பன் மதுரை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவிலில் இணை ஆணையர் செயல் அலுவலராக இருந்த சிவராம்குமார் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல திருவண்ணாமலை இணை ஆணையர் செயல் அலுவலருமான ஜோதி கடலூர் இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் இணை ஆணையராக பரணிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடலூர் இணை ஆணையராக பணியில் இருந்தார். மதுரை இணை ஆணையராக இருந்த செல்லத்துரை ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.
Comments are closed.