திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் காந்தி மார்க்கெட் பகுதியில் தெருமுனை கூட்டம்…* கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் பங்கேற்பு
திமுக தலைவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், கிழக்கு மாநகரம் மார்க்கெட் பகுதி கழகம் 18 மற்றும் 18 (அ) வட்டக் கழகங்களின் சார்பில் அழங்கநாதபுரம் தாராநல்லூர் பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. 18 -வது வட்டச் செயலாளர் சிலம்பரசன் மற்றும் 18 (அ) வட்டக் கழக செயலாளர் பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்கெட் பகுதி கழகச் செயலாளர் ஆர்.ஜி.பாபு அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை கழக பேச்சாளர் போடி காமராஜ், கிழக்கு மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன், இளம் பேச்சாளர் அலிமாஸ் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முடிவில், 18-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சண்முகப்பிரியா நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாநகர அவைத்தலைவர் நூர்கான், மாநகரத் துணைச் செயலாளர்கள் பொன்.செல்லையா,
சரோஜினி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
Comments are closed.