Rock Fort Times
Online News

லால்குடி மற்றும் கல்லக்குடியில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை, லாலாபேட்டையில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை… * மத்திய இணை அமைச்சரிடம் பெரம்பலூர் அருண்நேரு எம்பி வலியுறுத்தல்!

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான அருண் நேரு, தான் வெற்றி பெற்றதும் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க முயற்சி மேற்கொள்வேன், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவேன் என்பது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தார். அதன்படி, தான் வெற்றி பெற்றதும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முன்னின்று செய்து கொடுத்து வருகிறார். அதன்படி பெரம்பலூர் மற்றும் சமயபுரம் பகுதிகளில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும், பல்வேறு பணிகளை முன்னின்று செய்து கொடுப்பதில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்திலும் மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசி வருகிறார். அவரது இந்த அயராத பணியினை மக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்தநிலையில் மத்திய ரயில்வே மற்றும் நீர்வளத்துறை இணை அமைச்சர் வி. சோமண்ணாவை டெல்லியில் சந்தித்து, திருச்சி மாவட்டம் லால்குடி மற்றும் கல்லக்குடியில் புதிய ரயில்வே சுரங்கப்பாதை மற்றும் லாலாபேட்டையில் பாதசாரிகள் நடந்து செல்ல மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது அவர், தொகுதி மக்களுக்கு இணைப்பையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கு இத்திட்டங்கள் மிக முக்கியமானவை என்றும், இதனை பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மத்திய இணை அமைச்சர், இது குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்