Rock Fort Times
Online News

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் வெற்றியை தவற விட்ட மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…!

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு எழுதாத மற்றும் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட மாணவர்களின் எதிர் கால நலன் கருதியும், ஓர் ஆண்டு வீணாகாமல் தவிர்க்கும் வகையி லும் துணை பொதுத் தேர்வை ஜுலை 2-ம் தேதி முதல் நடத்த தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் வரும் கல்வி ஆண்டிலேயே மேல் நிலைக் கல்வியில் சேர முடியும். இதற்கான தேர்வுக் கால அட்ட வணை இன்று (மே 11) வெளியிடப் படுகிறது. வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அரசின் இலவச உதவி மையத்தை 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் தகுந்த ஆலோசனை வழங்கப்படும். தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிக்கல்வி துறையின் 14417 எனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அடுத்தகட்ட கல்வி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்