Rock Fort Times
Online News

தனியார் மயமாக்கலை கண்டித்து திருச்சியில் எஸ்.ஆர்.எம்.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம்…!

ரயில்வே தனியார் மயமாவதை கண்டித்தும், ஆட்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும், லட்சக்கணக்கான காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், 8-வது சி.பி.சி அறிக்கைக்காக காத்திராமல் 50 சதவீத டி.ஏ.வை உடனடியாக அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். என்.பி. எஸ், யூ.பி.எஸ்.ஐ ரத்து செய்ய வேண்டும். மீண்டும் ஓ.பி.எஸ். வழங்கிட வேண்டும்.01-01-2023 முதல் அனைத்து கேட்டகிரிகளுக்கும் சி.ஆர்.சி பதவி உயர்வு வழங்கிட வேண்டும் . ஐ.ஆர்.டி பதிவு செய்தவருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கிட வேண்டும், 4 பன்ச் பயோமெட்ரிக் என்ற பெயரால் ஒர்க் ஷாப் தொழிலாளர்களை துன்புறுத்தக் கூடாது, பயோமெட்ரிக்கை அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டுவரும் முடிவை கைவிட வேண்டும், அனைத்து கேட்டகிரிகளுக்கும் 8 மணி நேர வேலையை உறுதி செய்திட வேண்டும், லோகோ பைலட், கார்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒரு முறை முழுநாள் ஓய்வினை கட்டாயம் ஆக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் திருச்சி பொன்மலையில் இன்று(21-02-2025) துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்