ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருச்சி மாவட்டத்திற்கு வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை !
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள வைகுந்த ஏகாதசி பெருவிழாவின், முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பையொட்டி ஜன.10 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் கூறியது: ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுந்த ஏகாதசி பெருவிழா, இந்த ஆண்டு டிச. 30-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ஜன.10 ஆம் தேதி நடைபெறவுள்ளதுஇதையொட்டி, திருச்சி மாவட்டத்துக்கு ஜன.10-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். எனினும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வு நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது. அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜன. 25-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றார்.
Comments are closed.