Rock Fort Times
Online News

புதுக்கோட்டையைச் சேர்ந்த 14 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை…!

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் சிலர் இன்று(07-09-2024) காலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை வீரர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை சிறை பிடித்தனர். அத்துடன் அவர்களின் 3 விசைப்படங்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் மற்றும் விசைப்படகை காங்கேஷன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். தமிழக மீனவர்கள் 14 பேர் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்