மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாண்டியன். இவர் கடந்த மாதம் (13.12.2024) திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் திருக்கார்த்திகை தீப பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சாமி தரிசனத்திற்கு வந்த 14 வயது சிறுமியிடம் ஜெயபாண்டியன் பேச்சுக் கொடுத்தார். அதன்பின்னர் அந்த சிறுமி கழிவறைக்குச் சென்றபோது சிறுமியை பின் தொடர்ந்து சென்ற ஜெயபாண்டியன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி அழுதுகொண்டே பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் குழந்தைகள் நல மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து குழந்தைகள் நல உதவி மையத்தினர், திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமி அளித்த புகாரில் உண்மைத் தன்மை உள்ளது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீஸ் எஸ்.எஸ்.ஐ.யான ஜெயபாண்டியன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதோடு ஜெயபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக போலீஸ் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments are closed.