கோலாலம்பூரில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு பாம்புகளுடன் வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மலேசியா கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தின் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது ஒருபெண் பயணி கொண்டு வந்த பைகளில் பல்வேறு வகையை சேர்ந்த 22 பாம்புகள் தனித்தனியே பிளாஸ்டிக் டப்பாக்களில் வைக்கப்பட்டு இருந்தன. பின் பெட்டிகளை திறந்து பாம்புகளை அதிகாரிகள் நீண்ட கம்பி மூலம் வெளியே எடுத்தனர். பாம்புகளுடன் வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இவர் கொண்டுவந்த பையில் இருந்து பச்சோந்தியும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.