Rock Fort Times
Online News

கிணற்றில் விழுந்த 4 மாத குட்டி யானை மீட்பு.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கட்டமடுவு பகுதியில் சுற்றித்திரிந்த  குட்டியானை ஒன்று  திடீரென அப்பகுதி விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த விவசாயி   உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.  வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்