Rock Fort Times
Online News

நெய்தலில் தொய்வு – பொங்கல் முடிந்து தான் வேட்டி – சேலை ! ” கை ” விரித்தது கைத்தறித்துறை !

பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. போதிய நிதி இல்லாததால் ரொக்கம் வழங்கப்படவில்லை. ஆனால், விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கான பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. ஆகவே, ஜனவரி 31ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு அனைவருக்கும் விலையில்லா வேட்டி-
சேலை வழங்கப்படும் என கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி – சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் 1.77 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி – சேலை வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வேட்டி – சேலை தயாரிக்கும் பணி கடந்த செப்டம்பரில் துவங்கப்பட்டது. தற்போது வரை பணி நடந்து வருகிறது. பொங்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் வேட்டி,சேலை தயாரிப்பு பணி இன்னும் நிறைவு பெறவில்லை. தற்போது வரை 1.67 கோடி வேட்டிகள், 1.40 கோடி சேலைகள் தயாரிக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 10 லட்சம்
வேட்டிகள், 30 லட்சம் சேலைகள் தயாரிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து கைத்தறித்துறை அதிகாரிகள் கூறுகையில்., இன்னும் 10 லட்சம் வேட்டி, 30 லட்சம் சேலைகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும் என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்