Rock Fort Times
Online News

ரூ.17 கோடி மோசடி செய்ததாக சகோதரி புகார்: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் கைது…!

சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா. இவர் தூத்துக்குடி மாநகராட்சி 19-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இவர் மீது, உடன்பிறந்த அக்கா பொன்னரசி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், தன்னிடம் ரூ.17 கோடி ஏமாற்றியதாக ராஜா மீது குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், மலேசியா தப்ப முயன்ற ராஜாவை, போலீசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்