தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், அந்தப் பள்ளியின் ஆங்கில பாட ஆசிரியர் தமிழரசன் (37) மீது திருப்பனந்தாள் போலீஸார் உண்மைத்தன்மை அறிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தனர். வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் ஆசிரியர் தமிழரசன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்..

Comments are closed, but trackbacks and pingbacks are open.