கரூர் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் பெண்ணிற்க்கு 6வயது மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளது.அந்த பெண் வேலைக்கு செல்வதால் தனது குழந்தைகளை தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2020ம் ஆண்டு குழந்தையின் பாட்டி வீட்டில் இல்லாத போது, அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அத்துமீறி குழந்தைகள் இருக்கும் வீட்டில் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்ததை குழந்தைகள் தன் தாயிடம் சொல்லியுள்ளது. இதனால் பதட்டம் அடைந்த தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் போில் சீனிவாசனை கைது செய்த காவல் துறையினா் சீனிவாசனை சிறையில் அடைத்தனா். மேலும் இந்த வழக்கானது நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் இருந்து வந்தது. இந்நிலையில் இவ்வழக்கில் இரண்டு குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த சீனிவாசன் என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை, 2000 ரூபாய் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கவும் கரூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.