Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்: மனைவி சிகிச்சைக்காக வியாபாரி வைத்திருந்த ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்றவர் கைது…!

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வெங்கரை பகுதியை சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 42).வியாபாரி. இவர் தனது நண்பர் முத்துகிருஷ்ணனுடன் புதுக்கோட்டை செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் உள்ளே பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது ரெங்கராஜ் தனது மனைவி சிகிச்சைக்காக ரூ.1 லட்சம் பணத்தை தனது பாக்கெட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட 2 மர்ம நபர்கள் ரெங்கராஜ் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தைப் பறித்து கொண்டு தப்பி ஓடினர். உடனே திருடன்…திருடன்… என்று கத்திக் கொண்டே அந்த வாலிபர்களை ரெங்கராஜ் விரட்டி சென்றார். இதுகுறித்த தகவலின்பேரில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காட்டூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (42) என்பதும் தனது நண்பருடன் சேர்ந்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. அதன் பேரில் அவரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்