திமுக கொள்கை பரப்பு செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா. இவர் சில காலம் பாஜகவில் இருந்தார். பின்னர் அந்த கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் உள்ளாா். இவரது வீடு திருச்சி சண்முகா நகரில் உள்ளது. இவர், தனது காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த காரின் கண்ணாடியை மர்ம நபா்கள் கல்லால் அடித்து உடைத்து உள்ளனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசில் சூர்யா புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சூர்யாவின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக சூர்யாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சூர்யாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Comments are closed.