தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அயலக வேலைவாய்ப்பு நிறுவனமான தமிழக பொதுத் துறை நிறுவனத்தின் ஆலோசகராக லி.ஷாநவாஸ்கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே, உயர்கல்வி துறையின் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது வெளிநாடு வேலை வாய்ப்புகளை கண்டறிந்து வெளிநாடு வேலைக்கு செல்ல விரும்பும் தமிழர்களை முறையாக பாதுகாப்பாக அனுப்பும் பணிகளை மேற்க்கொள்ளும் அயலக வேலைவாய்ப்பு நிறுவனத்தின ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளரான லி.ஷானவாஸ்கான் திருச்சி மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான செய்தியாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.