தஞ்சை மாவட்டம், ஆலக்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை, மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை-செங்கோட்டை – மயிலாடுதுறை முன்பதிவற்ற விரைவு ரயில்களானது (16847, 16848) தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 10 முதல் மே 10 வரை 3 மாதங்களுக்கு சோதனை முறையில் 1 நிமிடம் நின்று சென்றது. நிர்ணயிக்கப்பட்ட இந்தச் சோதனை மேலும் நீட்டிக்கப்படாது. எனவே, ஆலக்குடி ரயில் நிலையத்தில் மேற்கண்ட ரயில்கள் இனி நிற்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.