Rock Fort Times
Online News

ஆலக்குடி ரயில் நிலையத்தில் இனி செங்கோட்டை, மயிலாடுதுறை ரயில்கள் நிற்காது…!

தஞ்சை மாவட்டம், ஆலக்குடி ரயில் நிலையத்தில் செங்கோட்டை, மயிலாடுதுறை ரயில்கள் இனி நிற்காது என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மயிலாடுதுறை-செங்கோட்டை – மயிலாடுதுறை முன்பதிவற்ற விரைவு ரயில்களானது (16847, 16848) தஞ்சை மாவட்டம் ஆலக்குடி ரயில் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 10 முதல் மே 10 வரை 3 மாதங்களுக்கு சோதனை முறையில் 1 நிமிடம் நின்று சென்றது. நிர்ணயிக்கப்பட்ட இந்தச் சோதனை மேலும் நீட்டிக்கப்படாது. எனவே, ஆலக்குடி ரயில் நிலையத்தில் மேற்கண்ட ரயில்கள் இனி நிற்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்