4 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை- திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்
திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட மதுரம் பள்ளி, இ.பி ரோடு ஹோசன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி, டவுன்ஹால் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் முதல் ஐந்து இடங்களை பிடித்த 20 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, பேக், வாட்ச், ஆடைகள் வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஏற்பாட்டில் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது. விழாவில் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளரும், மண்டல குழுத்தலைவருமான மதிவாணன், மண்டல குழு தலைவர் ஜெயநிர்மலா,பகுதி செயலாளர்கள் ஏ.எம்.ஜி.விஜயகுமார், மணிவேல்,மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாவட்ட தலைவர் புஷ்பராஜ், தொழிலதிபர் அலெக்ஸ் ராஜா, கண்ணப்பா ஹோட்டல் உரிமையாளர் கண்ணையா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.