‘இல்லத்தரசி கூப்பன்’ என்கிற பெயரில் மகளிருக்கு ரூ.8000 வழங்கப்படும்…* திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று( மார்ச் 29) சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:-
* திருச்சி, மதுரை, சேலம், கோவை அருகே நவீன வசதிகளுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படும்.
• 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு இதுவரை காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அது 15 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 8ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும்.
• மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
• இலவச மின்சாரம் பெறும் 20 லட்சம் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
• 10 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
• முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படும் வருமான வரம்பு ரூ 5 லட்சமாகவும், காப்பீடுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயரும்.
• புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகள் பெறும் உதவித்தொகை
ரூ. 1500 ஆக உயர்த்தப்படும்.
• நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு
ரூ.3,500 ஆக உயர்த்தப்படும்.
• கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு
ரூ. 4,500 ஆக உயர்த்தப்படும்.
• பால் கொள்முதல் லிட்டர் ரூ.5 உயர்த்தப்படும்.
• முதியோர் உதவித் தொகை ரூ.1,200 லிருந்து, ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
• மாற்றுத்திறனாளி உதவித்தொகை ரூ. 1500லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
• மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்.
• செம்மொழி மாநாடு சென்னையில் நடத்தப்படும்.
• சுய உதவிக்குழு பெண்களுக்கு மானியத்துடன் ரூ.5 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
• பேரிடர் கால நிவாரணம் நெல்லுக்கு ஹெக்டேருக்கு
ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.
• மாவட்ட மற்றும் வட்ட மருத்துவமனைகளில் டயாலிசிஸ் கருவிகள் இருமடங்காக்கப்படும்.
• அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
• மத்திய அரசின் 8வது உதியக்குழு நடைமுறைக்கு வந்தபின்னர், மாநிலத்திலும் உடனடியாக செயல்படுத்தப்படும்.
• அரசுத்துறைகளில் உள்ள 1.50 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
• அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு உரிய நேரத்தில் வழங்கப்படும்.
• கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படும்.
• புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
• 5 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்.
• ஆயிரம் கிராம கோயில்கள் புனரமைப்பு செய்யப்படும்.
• அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு விடுதிகள் அமைக்கப்படும்.
• சிறுபான்மையினர் கடன் உதவி 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
• இல்லத்தரசிகள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க ஒவ்வொரு குடும்பத்துக்கும்
ரூ.8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.
* வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஒரு சிறப்பு வளர்ச்சி திட்டம், மேற்கு மாவட்டங்களுக்கான சிறப்பு வளர்ச்சித் திட்டம் ஆகியவை ரூ.20 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படும்.
உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்று இருந்தன.

Comments are closed.