திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி காரில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறையின் என்போர்ஸ்மென்ட் அதிகாரியாக இருந்து வருபவர் அங்கித் திவாரி. இவர் டாக்டர் ஒருவரிடம், அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்தப் பணத்தை காரில் வைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அமலாக்கத்துறை அதிகாரி காரிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது காரில் கட்டுக்கட்டாக ரூ.20 லட்சம் இருந்தது தெரிய வந்தது . இந்தப் பணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது மேற்கண்ட தகவல் தெரிய வந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவர் இதுபோன்று மேலும் பலரிடம் லஞ்சம் வாங்கினாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சப் பணத்துடன் சிக்கிய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.