Rock Fort Times
Online News

காலிமனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம்: திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் வைத்த பொறியில் வசமாக சிக்கிக் கொண்ட மாநகராட்சி பில் கலெக்டர்…

திருச்சி, கே கே நகர், இந்திரா காந்தி நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தன்னுடைய மனைவி அறிவுசெல்வி பெயரில் கொட்டப்பட்டு அன்பில் நகரில் உள்ள 5920 சதுர அடி காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய மாநகராட்சி மண்டலம் 4 -ல் விண்ணப்பித்துள்ளார். அவருடைய விண்ணப்பத்தை பரிசீலனை செய்து அதற்கு வரி நிர்ணயம் செய்ய மண்டலம் 4-ன் பில் கலெக்டராக உள்ள செபாஸ்டின்(56), சீனிவாசனிடம்
ரூ.12 ஆயிரம் பேரம் பேசி இறுதியாக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சீனிவாசன், இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி மாநகராட்சி மண்டலம்-4 அலுவலகத்திற்கு இன்று(12-06-2025) சென்ற சீனிவாசன் அங்கு பணியில் இருந்த செபாஸ்டினிடம் ரூ.10 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாய்ந்து சென்று செபாஸ்டினை கையும், களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவருடைய அறையில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 24 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து செபாஸ்டினை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாநகராட்சி ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்