திருச்சியில் தூர்வாரும் பணிகள் துவக்கம் : மேட்டூர் அணை நீர் வருவதற்கு முன்பாக முடிக்க முடிவு.
அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
தமிழக முதல்வர் காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் திட்டத்தின் கீழ் திருச்சி மண்டலத்தில் 636 பணிகளை 4004.83 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.80.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 100 பணிகளை 375.78 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.15.88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசன வசதிக்காக திறந்து விடப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைமடை வரை தங்கு தடையின்றி சென்று சேரும் வகையில், டெல்டா பாசனப்பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வாரி சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக திருச்சி பஞ்சப்பூர் அருகில் உள்ள கே.சாத்தனூர் கிராமம் கோரையாற்றில், நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணிகளை இன்று ( 29.04.2023 ) கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்திளாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்டத்தில் 100 பணிகளை 375.78 கி.மீ நீளம் வரை மேற்கொள்ள ரூ.15.88 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 21.5லட்சம் மதிப்பில் 3 கிமீ வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படும் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு 2 மாதத்திற்கு முன்பே பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் ரா.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, நகர பொறியாளர் சிவபாதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மண்டல தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.