Rock Fort Times
Online News

திருச்சியில் உணவுப்பொருள் வழங்கல் – குறைதீர் கூட்டம்

பொது வினியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் நாளை (13.05.2023) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கடையில் பொது வினியோகத்திட்ட குறை  தீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. இதற்கு ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம், மணப்பாறை, மருங்காபுரி, லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம் ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டம், கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் பொது வினியோகத்திட்டம் தொடர்பான கோரிக்கைகளான குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர கோரிக்கைகளை தெரிவித்து மேற்காணும் கூட்டங்களில் கலந்து கொண்டு  பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்