சென்னை கண்ணகி நகரில் தலைவிரித்தாடும் கஞ்சா விற்பனை – குற்றவாளியை பிடிக்க சென்று கடி வாங்கிய போலீசார் ( வீடியோ இணைப்பு )
சென்னை, கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரியும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான உமாபதி என்பவன் கண்ணகிநகர், எழில்நகர் 15-வது பிளாக்கில் வசித்து வருகிறான் இவன் அப்பகுதியில் கஞ்சா போதையில் அதே பகுதியை சேர்ந்த சின்னா மற்றும் தினேஷ் என்பவர்களை கத்தியால் வேட்டியுள்ளான் வெட்டுப்பட்ட இருவர் கொடுத்த புகாரின் பேரில், கண்ணகிநகர் போலீசார் உமாபதியை பிடிக்க 15-பிளாக்கிற்க்கு சென்ற போது, உமாபதி கஞ்சா போதையில் இருந்ததால் தன்னை பிடிக்க வந்த போலீசாரை தாக்கி கையில் கடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான், அப்போது உமாபதியின் கூட்டாளி பாட்டிலை எடுத்து உடைத்து தனது வயிற்றில் தானே குத்திக்கொண்டதோடு போலீசாரை குத்தவும் முயற்சி செய்துள்ளான்.
தற்போது கண்ணகிநகர் போலீசார் உமாபதி உட்பட மூன்று பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர், கண்ணகிநகரில் கஞ்சா விற்பணை அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெறிவித்துள்ளன
Comments are closed, but trackbacks and pingbacks are open.