Rock Fort Times
Online News

ராஜ்ய சபா சீட்’: “அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை… நேரம் வரும்போது அனைத்தையும் சொல்வேன்!” – தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ்

மற்ற கட்சிகளைப் போலவே தேமுதிக-வும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. அதற்கு முன்னோட்டமாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனை கட்சியின் இளைஞரணி செயலாளராக தேமுதிக பொதுக்குழு அங்கீகரித்திருக்கிறது. கூடவே, கட்சியின் பொருளாளராக எல்.கே.சுதீஷையும் தேர்வு செய்திருக்கிறார்கள். வெற்றிக் கூட்டணியில் இடம் பிடிப்பது, கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட சவால்களை தேமுதிக-வும் எதிர்க்கொள்ள இருக்கும் நிலையில், கட்சியின் புதிய பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறுகையில், 2024 மக்​கள​வைத் தேர்​தல் வரை அதிமுக கூட்​ட​ணி​யில் இருந்​திருக்​கி​றோம். 2024
மக்​களவை தேர்​தலில் பாஜக கூட்​ட​ணியை விட்டு அதி​முக வில​கி​னாலும் நாங்​கள் அதி​முக கூட்​ட​ணி​யில் போட்​டி​யிட்​டோம். தற்போது அதி​முக-​வும், பாஜக-​வும் மீண்​டும் இணைந்​திருக்​கி​றார்​கள். இனி, மீண்​டும் அனை​வ​ரும் ஒன்​றிணைய வேண்​டும். தேமு​திக அக்​கூட்​ட​ணி​யில் தொடர்​வதா…வேண்​டாமா…என்​பதை எங்​களது பொதுச்​செய​லா​ளர் உரிய நேரத்​தில் முடிவு செய்​வார். ஜனவரி 9-ல் கடலூரில் தேமு​திக மாநாடு நடை​பெற உள்​ளது. அதில், தேமு​திக யாருடன் கூட்​டணி என்​பதை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் முறைப்​படி அறி​விப்​பார். தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக வாக்குறுதி கொடுத்தது உண்மை. நேரம் வரும்​போது அனைத்​தை​யும் வெளிப்​படை​யாகச் சொல்​வேன் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்