Rock Fort Times
Online News

மயில்சாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – நடிகா் ரஜினிகாந்த்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகா் மயில்சாமி நேற்று அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானாா். அவரது உடலிற்க்கு திரைதுறையினா் திரண்டு வந்து பலரும் அஞ்சலி செலுத்தினா். அவருடைய உடலிற்க்கு அஞ்சலி செலுத்திய நடிகா் ரஜினிகாந்த் மயில்சாமி குறித்து பேசுகையில், எப்போதும் நான் அவாிடம் சினிமாவை குறித்து பேசும்போதெல்லாம் அதை தவிா்த்து விட்டு, அவா் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்யையும், கடவுள் சிவனையும் குறித்துதான் பேசுவாா். திருவண்ணாமலை தீபத்திற்கு செல்லும்போதெல்லாம் எனக்கு தவராமல் செல்போனில் தொடா்புகொண்டு பேசுவாா். ஆனால் இந்த முறை மஹா சிவராத்திாியை முன்னிட்டு சென்னையில் சோழிங்கநல்லுாா் கோவிலில் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டாா். நேற்று முன்தினம் அவா் 3 முறை செல்போனில் என்னை தொடா்பு கொள்ள முயற்சி செய்துள்ளாா். நான் படப்பிடிப்பில் இருந்நததால் என்னால் அவாிடம் பேச முடியவில்லை. நேற்று அவரை தொடா்பு கொண்டு மன்னிப்பு கேட்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை,சிவராத்திாி அன்று இரவு அன்று அவருடைய தீவிர பக்தனை சிவபெருமான் அழைத்துக்கொண்டாா். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று உருக்கமாக கூறினாா். அதனைத்தொடா்ந்து இன்று காலை சென்னை ஏவிஎம் இடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்