கோவையில் இயங்கி வரும் ஈஷா யோகா மையத்தை கண்டித்தும், தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஈஷா நிறுவனர் வாசுதேவை விசாரிக்க வேண்டும், ஈஷாவை மின் மயான பொறுப்புகளில் இருந்து விலக்கிட வேண்டும், அங்கு தொடரும் பல்வேறு மர்ம மரணங்கள் குறித்து விசாரித்து வரும் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும், என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன், வெள்ளிங்கிரி மலை பாதுகாப்பு சங்கத் தலைவர் காமராசு மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.