திருச்சி கருமண்டபம் சோழன்நகரில் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாலை போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சோழன்நகர் 1-வது கிராசில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக பொன்மலைப்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த வீட்டில் இருந்து திருப்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும், தர்மபுரியை சேர்ந்த 26 வயது பெண்ணும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்த வீட்டில் இருந்து ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டது.