Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரத்தில் நாளை மின்தடை

ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (அக்டோபர் -05) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, தேவிமங்கலம், புறத்தாக்குடி, மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர். கூத்தூர், , அய்யம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி சிறுகுடி, வீரானி, சிறுப்பத்தூர், , அக்கரைப்பட்டி, நெம்பர் 1 டோல்கேட், தாளக்குடி உத்தமர் கோவில், ஆகிய பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருச்சி, அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், அரியமங்கலம், , பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், எம்.ஜி.ஆர். நகர், சங்கிலியாண்டபுரம், , மேலகல்கண்டார் கோட்டை,கீழகல்கண்டார் கோட்டை, வெங்கடேஸ்வராநகர், கொட்டப்பட்டு (ஒருபகுதி), காட்டூர், . நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, , பொன்மலை ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்