திருச்சி மாநகரில் மன்னார்புரம், அம்பிகாபுரம் ஆகிய பகுதிகளில் செயல்படும் துணைமின் நிலையங்களிலும், அதேபோல் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதிகளான, சமயபுரம், லால்குடி ஆகிய துணை மின் நிலையங்களிலும் நாளை ( டிச. 7ம் தேதி ) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமயபுரம் துணை மின் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது., சமயபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, , வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, , கூத்தூர், நொச்சியம்,பளூர், பாச்சூர், , பனமங்கலம், குமரக்குடி, அழகியமணவாளம், திருவரங்கப்பட்டி, கோவத்தக்குடி, சாலப்பட்டி, , அய்யம்பாளையம், , , , வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, மாருதிநகர், டோல்கேட்,தாளக்குடி, உத்தமர்கோவில் மற்றும் கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (07.12.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதேபோல் எல்.அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (07.12.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதனால், லால்குடி, காமராஜ் நகர், பாலாஜிநகர், ஆங்கரை, , கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, , மேலவாளாடி, கிருஷ்ணாபுரம், , பச்சாம்பேட்டை, திருமணமேடு, , நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை (07.12.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி, மன்னார்புரம் துணைமின்நிலையத்தில் நாளை (07.12.2024) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மத்திய சிறைச்சாலை, , கொட்டப்பட்டு, மொராய்ஸ்கார்டன், , பொன்மலைப்பட்டி, , , பென்சனர்காலனி, ஈவெரா கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை (07.12.2024) காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது. மேலும் அம்பிகாபுரம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், அரியமங்கலம், எஸ்ஐடி, அம்பிகாபுரம், ரயில்நகர், , , மலையப்பநகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ்நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜிநகர், மேலக்கல்கண்டார்கோட்டை,கீழக்கல்கண்டார்கோட்டை, , கொட்டப்பட்டு, அரியமங்கலம், சிட்கோகாலனி, காட்டூர், , நத்தமாடிபட்டி, , ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் விண்நகர் ஆகிய பகுதிகளில் நாளை (7.12.2024) காலை 9:45 முதல் மாலை 4:00 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.