திருச்சி துணை மின் நிலையத்தில் நாளை( 17.06.2023 ) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக மத்திய பஸ் நிலையம், வ.உ.சி சாலை, மாவட்ட ஆட்சியரக சாலை பகுதிகள், ராஜா காலனி, குமுளித்தோப்பு, கல்லாங்காடு, பெரிய மிளகுபாறை, ஜங்ஷன் ரயில் நிலைய பகுதிகள், வில்லியம்ஸ், ராயல், கான்வென்ட், பறவைகள், பாரதியார், குட்ஷெட், புதுக்கோட்டை சாலைகள், கண்டித்தெரு, முதலியார் சத்திரம், மேலப்புதூர்,ஜென்னிபிளாசா, தலைமை அஞ்சலகப் பகுதிகள், காஜாப்பேட்டையின் சில பகுதிகள், உறையூர் மேட்டுத்தெரு, கல்நாயக்கன் தெரு, வாலாஜா பஜார், பாண்டமங்கலம், வயலூர் சாலை, கனரா வங்கி காலனி, குமரன் நகர், சிண்டிகோ வங்கி காலனி, பேங்கர்ஸ் காலனி, சீனிவாசா நகர், ராமலிங்க நகர் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இதே போல கீதாநகர், அம்மையப்ப பிள்ளைநகர், எம்.எம்.நகர், சண்முகா நகர், ரங்கா நகர், உய்யக்கொண்டான் திருமலை, கொடாப்பு, வாசன் நகர், சோழங்க நல்லூர், உறையூர் வெக்காளியம்மன் கோயில் பகுதி, பாத்திமா நகர், குழுமணி சாலை, நாச்சியார் கோயில், பொன்னகர், கருமண்டபம், செல்வ நகர், ஆர்.எம்.எஸ்.காலனி, தீரன் நகர், பிராட்டியூர், ராம்ஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய திருச்சி தென்னூர் செயற்பொறியாளர் பி.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.