திருச்சி அம்பிகாபுரம் துணை மின்நிலையத்தில் நாளை (09.11.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில் நகர், தங்கேஸ்வரி நகர், காமராஜ் நகர், மலையப்ப நகர், ராணுவ காலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பா நகர், எம்.ஜி.ஆர். நகர், காட்டூர், பாலாஜி நகர், சந்தோஷ் நகர், எல்லக்குடி, குறிஞ்சி நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9-45 முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். இதேபோல, சமயபுரம் துணைமின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சமயபுரம், இருங்களூர், புறத்தாகுடி, கொணலை, கரியமாணிக்கம், எதுமலை, தேனூர், மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, மருதூர், ரத்தினங்குடி, கூத்தூர், நொச்சியம், ராஜகோபால்நகர், மேல்பத்து, பாச்சூர், வி.துறையூர், மாடக்குடி. ஈச்சம்பட்டி, தத்தமங்கலம், சிறு குடி, சிறுப்பத்தூர், ராசாம்பாளையம், தழுதாளப்பட்டி, அக்கரைபட்டி, தேவிமங்கலம், வங்காரம், ஆயக்குடி, பூனாம்பாளையம், வலையூர், பாலையூர், ஸ்ரீபெரும்புதூர், தேவிமங்கலம் உள்ளிட்ட பகுதி களில் நாளை காலை 9-45 முதல் மாலை 4 மணிவரை மின் வினியோகம் இருக்காது என ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
லால்குடி தாலுகா, எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் லால்குடி, ஏகே நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர், விஓசி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, பச்சாம்பேட்டை, திருமணமேடு தெற்கு, மும்முடி சோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என லால்குடி செயற்பொறியாளர் அன்புச்செல்வம் தெரிவித்துள்ளார்.
Comments are closed.