Rock Fort Times
Online News

துவாக்குடி பகுதியில் மே 28-ம் தேதி பவர் கட்…!

திருச்சி, துவாக்குடி துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (மே 28) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இந்த துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் நேரு நகர், அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி பகுதி, எம்.டி.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப், செக்டார் மற்றும் என்.ஐ.டி, துவாக்குடி மற்றும் தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி, பொய்கைக்குடி, எலந்தபட்டி, காந்தலூர், பெரிய சூரியூர், சின்ன சூரியூர் ஆகிய பகுதிகளில் 28ம் தேதி காலை 9-45 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்