Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நாளை பிப்.5 -ம் தேதி பவர் கட்…!

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நாளை 05-02-2025 (புதன்கிழமை) மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், லால்குடி எல்.அபிஷேகபுரம் துணை மின்நிலையத்தில் நாளை பிப்ரவரி 5ம் தேதி (புதன்கிழமை) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக லால்குடி, ஏ.கே.நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர் நகர், பாரதி நகர், வ.உ.சி. நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்று மங்கலம், பச்சாம்பேட்டை, மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம், மேலவாளாடி, கிருஷ்ணாபுரம், பொக்கட்டக்குடி, சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி, திருமணமேடு தெற்கு, நன்னிமங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்