மதுரை மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் வார்டு உறுப்பினர் விஸ்வநாதன் என்பவர், தூய்மை பணியாளர் மரணத்திற்கு காரணமாக இருந்ததாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் எஸ்.ஜி.சூர்யா சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார். இது குறித்து மதுரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியும், விஸ்வநாதன் என்ற கவுன்சிலரும் கிடையாது என குறிப்பிட்டு, வதந்தி பரப்பி அவதூறு ஏற்படுத்தும் வகையில் பதிவிட்ட, எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து மதுரை மாநகர சைபர் கிரைம் போலீசார், எஸ்.ஜி.சூர்யாவை நேற்று ( 16.06.2023 ) நள்ளிரவில் சென்னை தியாகராய நகரில் கைது செய்து மதுரை கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இதனைக் கண்டித்து பா.ஜ.க.வினர் எழும்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.