Rock Fort Times
Online News

குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு…

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவர் மதிவாணன் வழங்கினார்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சார்பாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும்
ரூ.1000 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(10-01-2024) தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி தொடங்கி வைத்தனர்.அதேபோலதிருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகர் மற்றும் அரியமங்கலம் கலைவாணர் தெரு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன நியாய விலைக்கடையில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவருமான
மு.மதிவாணன் பயனாளிகளுக்கு ரூ.1000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு , வேட்டி சேலை ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் திமுக பகுதி கழக செயலாளர்கள் கொட்டப்படு இ.எம்.தர்மராஜ் , ஏ.எம்.ஜி.விஜய்குமார் , வட்ட செயலாளர்கள் மாரிமுத்து,
தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்