அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்., அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023-2024ம் ஆண்டிற்கான கருணைத் தொகை மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 லட்சம் நிதி ஒதுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி’சி’ மற்றும் ‘ டி’ பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத்தொகை வழங்கப்படும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2023-2024 நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு ரூ.1,000 கருணைத்தொகை ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Comments are closed.