Rock Fort Times
Online News

திருச்சியில் ஆயுதங்களுடன் சதித்திட்டம் தீட்டிய கும்பலை சுற்றி வளைத்த போலீசார்- 2 பேர் கைது, 4 பேர் தப்பி ஓட்டம்…!

திருச்சி, கோணக்கரை ரோடு பகுதியில் ஆயுதங்களுடன் 6 பேர் கொண்ட கும்பல் சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு ஆயுதங்களுடன் 6 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது உறையூரை சேர்ந்த முகமது முஸன் (வயது 24), புத்தூரை சேர்ந்த பிரசன் இம்மானுவேல் (21) என்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஆயுதங்களுடன் தப்பி ஓடிய உறையூரை சேர்ந்த முகமது சித்திக், முகமது ஆசிக், முகமது ஜாஸ் பசித், உஸ்மான் ஆகிய
4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்